தமிழ் பெண்ணை மணந்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா..! சமூக வலைத்தளங்களில் வாழ்த்தும் ரசிகர்கள்

டெல்லி: இந்தியா, இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிசிசிஐயிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கோரிக்கை விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பிசிசிஐ அவரை விடுவித்தது. அப்போதே பும்ரா திருமணம் செய்துகொள்ள தான் விடுப்பு வாங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. முத்தாய்ப்பாக தற்போது நடைபெற்று வரும் டி20 போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை.

உடனே அவருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்தி கிளம்பியது. அனுபமாவின் தாயார் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்பின் தான் உண்மையான தகவல் வெளியானது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினி சஞ்சனா கணேஷனை பும்ரா மணக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சஞ்சனா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொகுப்பாளினியாகவும் பணியாற்றிவருகிறார். இந்தத் தகவலை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அன்பினால் இணைந்த நாங்கள் இருவரும் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். எங்கள் திருமணச் செய்தியையும் எங்கள் மகிழ்ச்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவதற்குப் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: