நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் பிரசாரம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை அப்பகுதியில் பிரசாரம் செய்தார். திருவொற்றியூர் சுங்கச் சாவடியில் இருந்து திறந்த ஜீப்பில் பீர் பயில்வான் தர்கா தெரு, காலடிப்பேட்டை திருச்சினாங்குப்பம் போன்ற பல இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, உடன் வந்த தொண்டர்கள் மேளம், பேண்டு வாத்தியம் ஆகியவற்றுடன் கையில் விவசாயியின் சின்னம் அடங்கிய பதாகைகளை ஏந்தி மோட்டார் பைக்கிலும், நடந்தும் உடன் சென்றனர்.

Related Stories: