காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் தரையிறங்கிய தனியார் ஹெலிகாப்டரை தேர்தல் கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியதாக தேர்தல் பணிக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் நடவடிக்கை நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் சேரன் தலைமையில் குழுவினர். சிறப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகம் ஏற்படும் விதத்தில் பணம் பொருட்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.