பாபநாசம் அருகே அரசுப் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா: மாணவிகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமை

தஞ்சாவூர்: பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வகுப்பு இன்று நடைபெற்றுள்ளது. அப்போது சில மாணவிகளுக்கு உடல்நலக்குறை ஏற்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு சோதனை செய்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 மாணவிகளின் குடும்பத்தினரும் மருத்துவ பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்னனர். இதனை தொடர்ந்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அது கொரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டுள்ளது.

Related Stories: