தஞ்சாவூர்: பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வகுப்பு இன்று நடைபெற்றுள்ளது. அப்போது சில மாணவிகளுக்கு உடல்நலக்குறை ஏற்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு சோதனை செய்ததில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.