மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது. இவற்றை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வருகின்றனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரியில் ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து மரங்களில் தங்கியிருந்து முட்டையிட்டு குஞ்சி பொறித்து செல்கிறது. இதன்படி இந்தாண்டு பருவமழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் நிரம்பியது. இதனால் வெளிநாட்டு பறவைகளான கூழைக்கடா, வர்ணநாரை, நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டிவாயன் உள்பட பல பறவைகள் வந்து தங்கியுள்ளது.