நிலக்கோட்டை தொகுதி மவிகவுக்கு ஒதுக்கீடு: ஆதி தமிழர் பேரவைக்கு அவினாசி தொகுதி ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவைக்கு அவினாசி தொகுதியும், மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதற்கிடையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நேற்று திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் ஆதிதமிழர் பேரவைக்கு அவினாசி(தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதி தமிழர் பேரவையில் நிறுவன தலைவர் அதியமான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதைப்ேபான்று மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல் ராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Related Stories: