திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் புயலை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுமாறு ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளா மட்டுமல்லாது நாடு முழுவதும் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுமாறு நெருக்கடி கொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது. ஸ்வப்னாவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி இந்த தகவலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.