தமிழகத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குமரி மாவட்டம் வருகை தந்திருந்தார். அவர் ரோடுஷோவில் பங்கேற்றார். திறந்த ஜீப்பில் சுமார் ஒரு கி.மீ தூரம் கையசைத்தவாறே வந்துகொண்டிருந்தார். அவர் வருவதற்கு முன்னதாக முக்கிய சந்திப்புகளில் மேளதாளங்கள் இசைக்கப்பட்டு பிரசார பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதனை கட்சியினர் ரசித்துக்கொண்டு இருந்தனர். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பெருமளவு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் ‘‘அக்கா ஏன் விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது? ஓடும் பஸ்சில் பலாத்காரம் நடக்குது, அதுக்கு நம்ம ஆட்சி வந்தாதான் தீர்வு’’ என்ற பாடலை இசைக்கவிட்ட வண்ணம் இருந்தனர்.