சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில் மதுரவாயலில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு ஏற்படவில்லை. அதற்கு முன்பு இருந்தே பொருளாதார வீழ்ச்சி அதிகரித்து உள்ளது. ஒரு ஆண்டில் 15 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் உரிமை பறி்க்கப்படுகிறது. மோடி அரசு பணக்காரர்களை மிகப்பெரிய சூப்பர் பணக்காரர்களாக ஆக்குகிறது. தனியார் மயத்தை நோக்கி இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது.