உதகை: உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரியவகை வெள்ளைநிற புலிகள் தென்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே அவலாஞ்சி வனப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞர் 2 வெள்ளை புலிகளை புகைப்படம் எடுத்து வனத்துறையினரிடம் கொடுத்துள்ளார். அதனை கண்டு வியப்படைந்த வனத்துறையினர் வெள்ளை புலிகளின் நடமாட்டத்தை அறிய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.