தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாட்டில் முக்கிய இடத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அங்குள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்ற போலீசார் காவி சால்வையை அகற்றினர். பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவித்தது ஒரு பெண் என்பது தெரிந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.