ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து

புதுடெல்லி: வினாத்தாள் வெளியானதால் ராணுவ ஆள் சேர்ப்புக்கு நடத்தப்பட இருந்த போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் பொதுப் பணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் வரவேற்கப்பட்டன. நாடு முழுவதும் பல ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த பதவிகளுக்கு பொது போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நுழைவு தேர்வு வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது.

புனே போலீசாரும், ராணுவத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து கேள்வித்தாளை கசிய விட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, புனேவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதன் எதிரொலியாக, இந்த போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வினாத்தாள் வெளியானது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. ஆட்கள் தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வை ரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: