சென்னை: அதிமுக - பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, ஒப்பந்தம் படி பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என பேச்சுவார்த்தைக்கு பிறகு பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். இந்த கூட்டணியானது நிச்சியமாக மகத்தான வெற்றி பெறும் என கூறினார். இந்த தேர்தலில் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம். எனவே அரசு அதை நிறைவேற்றியுள்ளது. 40 ஆண்டுகால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது என கூறினார்.