பாகிஸ்தானின் 2வது ஜனாதிபதியாக சர்வாதிகாரி அயூப்கான் இருந்தபோது அவரது சிலையை லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் அரங்கில் நிறுவ பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. சர்வாதிகாரி என்பதாலும், மத உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பதால் எதிர்ப்பு ஏதும் இருக்காது என்று நினைத்தனர். ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஃபசன் மக்மூத், நசிம் உல்கானி ஆகியோர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பணிந்தது. இப்போது அந்த அரங்கத்தில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் அப்துல் ஹபீஸ் கர்தாரின் சிலை இருக்கிறது.