ஐபிஎல்லில் இன்று மோதல்: டெல்லியை பழிதீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ் ?

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. டெல்லி 8 போட்டியில் 3ல் வெற்றி, 5ல் தோல்வி என 7வது இடத்தில் உள்ளது. பிளே ஆப்சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் போட்டிகளில் கணிசமாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பன்ட் 254 ரன் அடித்துள்ளார். மற்ற யாரும் 200 ரன்னை தாண்டவில்லை. பவுலிங்கில் கலீல் அகமது, குல்தீப் யாதவ் சிறப்பாக வீசினாலும் மற்றவர்களால் ரன்களை கட்டுப்படுத்தமுடியவில்லை.

மறுபுறம் குஜராத் 8போட்டியில் 4 வெற்றி,4 தோல்வி என 6வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டியில் குறைந்தது 4ல் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் கில் 298, சாய் சுதர்சன் 269 ரன் எடுத்துள்ளனர். மிடில்ஆர்டர் தடுமாற்றமாக உள்ளது. பவுலிங்கில் மோகித்சர்மா 10 விக்கெட் எடுத்துள்ளார். சுழலில் , ரஷித்கான்,சாய் கிஷோர், நூர்அகமது வலுசேர்க்கின்றனர். இரு அணிகளும் இதற்கு முன் 4 முறை மோதி உள்ளன. இதில் தலா 2ல் வென்றுள்ளது. நடப்பு சீசனில் அகமதாபாத்தில் கடந்த 17ம் தேதி மோதிய போட்டியில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றது. அதற்கு அவர்களின் சொந்த மண்ணில் குஜராத் இன்று பதிலடி கொடுக்குமா என பொறுத்திருந்துபார்ப்போம். சிறிய மைதானம் என்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

The post ஐபிஎல்லில் இன்று மோதல்: டெல்லியை பழிதீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ் ? appeared first on Dinakaran.

Related Stories: