டெல்லி: 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கிறது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு ஊசி போடப்படுகிறது. இவ்வாறு 3 கோடி பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 1 கோடியே 30 லட்சத்து 67 ஆயிரத்து 47 பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. அடுத்ததாக மார்ச் 1-ந்தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஊசி போடப்படுகிறது. இதற்காக விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.