லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்ற 3,700 உட்பட 82,000 பேர் விண்ணப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததே இதற்கான காரணம் என்று கண்டனம் தெரிவித்து வேலை கொடுங்க மோடி என்ற தலைப்பில் 60 லட்சம் பேர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையில் 62 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு தேர்ச்சி என்ற தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியிடங்களுக்கு பிஎச்டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற 3,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.