முன்னாள் அமைச்சர் விருந்தில் பிரியாணிக்காக அடித்து கொண்ட மக்கள்

கோலார்: முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் கொடுத்த விருந்தில் பிரியாணிக்காக முண்டியடித்த மக்கள் மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது. கோலார் தாலுகாவில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆதரவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் நேற்று பகல் கூகிலஹள்ளி கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பாராட்டு விழா நடத்தினார். இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் மட்டுமில்லாமல், அவர்களின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.  

பாராட்டு விழா முடிந்த பின் அனைவருக்கும் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை சாப்பிடுவதற்காக நூற்றுக்கணக்காணோர்  ஒரே சமயத்தில் கூடி பிரியாணி வாங்க முண்டியத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளு-முள்ளு தீவிரமாகி ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் சில நிமிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: