கோலார்: முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் கொடுத்த விருந்தில் பிரியாணிக்காக முண்டியடித்த மக்கள் மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது. கோலார் தாலுகாவில் நடந்து முடிந்த கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆதரவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் நேற்று பகல் கூகிலஹள்ளி கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பாராட்டு விழா நடத்தினார். இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் மட்டுமில்லாமல், அவர்களின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.