திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்றார். டிடிவி. தினகரனின் அமமுகவில் இணைந்ததால், கட்சி தாவல் சட்டத்தில் இவர் எம்எல்ஏ பதவி இழந்தார். தொடர்ந்து 2019 இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நெட்டூர் நாகராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அதிமுக சார்பாக போட்டியிட மீண்டும் நெட்டூர் நாகராஜன் தலைமையிடம் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார். முன்னாள் சேர்மன்கள் பாக்யலட்சுமி, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் சீட் கேட்டு வருவதால், தனக்கே சீட் கிடைக்கும் வேண்டுதலோடு, கட்சியினரை, பொதுமக்களை கவர இவர், ‘‘கறி விருந்து’’ நடத்த தொடங்கி உள்ளார்.