சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைக்காக 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வெயிலில் நிற்கவைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக பூத் கமிட்டி பெண் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை கொடுப்பதற்காக 108 பெண்கள் கும்ப கலசலனங்களுடன் கடும் வெயிலில் நிற்கவைக்கப்பட்டார்கள்.