அமமுகவுடன் கூட்டணியா? தேமுதிக துணை செயலர் பேட்டி

ஊட்டி: ஊட்டியில் தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க.வில் ஏழு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, நீலகிரியில்  எனது கட்டுப்பாட்டில் நிர்வாக பணிகள் நடைபெறுகிறது. தேர்தலை எவ்வாறு  சந்திப்பது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.விடம் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். இம்முறை தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இன்னும் பேச அழைக்கவில்லை. அ.ம.மு.க.வுடன் கூட்டணி என்பது வதந்தி. அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி. இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.

Related Stories: