சட்டப்பேரவை தேர்தல் தமாகாவில் 25ம் தேதி முதல் விருப்ப மனு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தமாகாவில் விருப்ப மனுக்கள் வழங்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் வருகிற 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அளிக்க வேண்டும். விருப்ப மனு கட்டணமாக பொதுத்தொகுதிகளுக்கு ரூ.5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.2,500 செலுத்த வேண்டும்.

Related Stories: