உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம், பாபுஹரா கிராமத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுமிகள், கடந்த 17ம் தேதி கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வரச் சென்றனர். இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். அப்போது, விவசாய நிலத்தில் 3 சிறுமிகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்க நிலையில் கிடந்தனர். உடனடியாக 3 சிறுமிகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 14, 15 வயதுடைய சிறுமிகள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு போராடிய நிலையில் 16 வயதுடைய சிறுமி கான்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இப்பிரச்னை பரபரப்பான நிலையில், 2 சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள், பாஜ மாநில தலைவர் ராஜ் கிஷோர், எம்எல்ஏ அனில் சிங் மற்றும் பலர் முன்னிலையில் நேற்று 2 சிறுமிகளின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிறுமிகள் மர்மமாக இறந்தது குறித்து உபி போலீசார் விசாரிக்
கின்றனர்.