அமைச்சர்கள் மீதான 2வது ஊழல் பட்டியல் கவர்னரிடம் திமுகவினர் இன்று அளிக்கின்றனர்

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து அமைச்சர்கள் மீதான 2வது ஊழல் பட்டியலை திமுகவினர் அளிக்கின்றனர். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கடந்த டிசம்பர் 22ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீதான 97 பக்க ஊழல் புகார்களை அளித்தனர்.இந்த நிலையில் 2ம் கட்டமாக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஆதாரத்துடன் திரட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது ஊழல் பட்டியல் ஆளுநரிடம் விரைவில் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள் மீதான இரண்டாவது ஊழல் பட்டியலை திமுகவினர் வழங்குகின்றனர். திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுக குழுவினர் இந்த ஊழல் பட்டியலை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: