பங்காருபேட்டை: கொரோனா தொற்று பரவலால் வேலை இழந்த பட்டதாரி தம்பதி மனம் சோர்ந்து போகாமல் நாட்டு பசுக்கள் வாங்கி பால் கரந்து சம்பாதித்து வருகிறார்கள்.பங்காருபேட்டை தாலுகா, மாவனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மஞ்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த எம்.ஆர்.ஸ்ரீராம்-மஞ்சுளா தம்பதிகள். இதில் ஸ்ரீராம் முதுகலை பட்டம் முடித்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திலும் மஞ்சுளா இளங்கலை பட்டம் முடித்து தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இருவரும் வேலை இழந்தனர்.சில மாதங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்ட தம்பதிகள், நாம் ஏன் பசுக்கள் வாங்கி சொந்தமாக பால் கறந்து சம்பாதிக்ககூடாது என்று தீர்மானித்தனர். பங்காருபேட்டை தாலுகாவில் எங்கு பார்த்தாலும் சீமை பசுக்கள் உள்ளது. நாட்டு பசுக்கள் இல்லை. ஆகவே நாட்டு பசுக்கள் வாங்கி பிழைக்க முடிவு செய்தனர்.