டெல்லி: FASTag முறைக்கு இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாட்டின் முதுகெலும்பாக சிறு, குறு தொழில்கள் இருக்கின்றது. மேலும் கிராமப்புறங்களில் தோல் உற்பத்திக்கு சிறிய நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என அமைச்சர் கூறினார். கழிவுநீரை கூட பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.