சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது. இதனால் பிட்ச் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தொடரில் இந்தியா 1-0 என பின்தங்கி இருக்கும்போது, இதுபோன்ற பிட்ச் தயாரிப்பது துணிச்சலான நடவடிக்கை. இந்தியா டாசை இழந்திருந்தால் 2-0 என பின்தங்கி இருந்திருப்பார்கள், என தெரிவித்துள்ளார்.