மதுரை: தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறுமென மதுரையில் வைகோ தெரிவித்தார். மதுரையில் நேற்று மதிமுக சார்பில் நடந்த நிதி அளிப்பு விழாவில் பங்கேற்ற, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக போட்டியிடும் தொகுதியில் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் நான் பிரசாரம் மேற்கொள்வேன். நிச்சயமாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு தருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்தனை ஆண்டு காலம் தூங்கி விட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்திற்கு வர வேண்டிய எந்த திட்டமும் வரவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.