தஞ்சை : தஞ்சையில் பச்சிளங் குழந்தையைக் குரங்கு தூக்கிச்சென்று அகழியில் வீசியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் புவனேஷ்வரி. இவர்களுக்கு கடந்த வாரம் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில், பிறந்து 8 நாட்களான குழந்தைகளை வீட்டில் உறங்க வைத்துவிட்டு, தாய் புவனேஸ்வரி குளிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் குரங்குகள் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி, வீட்டிற்குள் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை தூக்கிச் சென்றுள்ளது.