சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர்கள் சாத்தூர், சிவகாசி, மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின.

Related Stories: