கொப்பள்: கொரோனா தொற்று காரணமாக சரியாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்பம் நடத்துவதற்கு பண தேவைக்காக அரசு கண்டக்டர் ஒருவர் தன் கிட்னியை விற்பதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பள் அருகேயுள்ள குஷ்டகியை சேர்ந்தவர் அனுமந்த கலிகேர். இவர் கடந்த 20 வருடங்களாக கங்காவதி அரசு டிப்போவில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சரியாக சம்பளம் வழங்கப்படாததால் வீட்டு வாடகை, ரேஷன் வாங்க என்று குடும்பம் நடத்த பெரும் சிரமப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.