பொள்ளாச்சி : தோல்வி நிரந்தரமில்லை; தேமுதிக நிலை மாறும் என பொள்ளாச்சியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறினார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில், தே.மு.தி.க.-அ.தி.மு.க. கூட்டணி தொடர்வது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை.
சசிகலா விடுதலையாகி வருவதற்கும், தே.மு.தி.க. நிலைபாட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அடுத்தவர்களின் நிலைப்பாட்டில் நாங்கள் நுழைய முடியாது.