பெங்களூரு: மாநிலத்தில் ஆர்டிஓ அலுவலகங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவோரை பணியிடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் வருவாய் ஈட்டி கொடுக்கும் துறைகளில் வட்டார போக்குவரத்து அலுவலகமும் ஒன்றாகவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதியதாக வாங்கும் வாகனங்கள் பதிவு மட்டுமில்லாமல், பழைய வாகனங்கள் புதுப்பித்தல், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்தல் உள்பட பல தேவைகள் என அரசுக்கு அதிகம் வருவாய் ஈட்டி கொடுக்கிறது. அதேபோல் முறைகேடு நடப்பதிலும் முன்னிலையில் உள்ளது. லோக்ஆயுக்தா நடத்தும் சோதனைகளில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் வீடுகளில் தான் அதிகம் நடக்கிறது.