பள்ளிப்பட்டு: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் வட்டார பொறுப்பாளராக அம்மையார் குப்பத்தை சேர்ந்த கே.எஸ்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.