பெங்களூர் : சசிகலா காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று தமிழகம் வருகிறார். பெங்களூருவிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா; அமைச்சர்களின் புகாரால் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் வந்தால் நடவடிக்கை உறுதி என காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் எச்சரித்துள்ளார். எனினும், காவல்துறையின் கெடுபிடிகளை சட்டரீதியாக சந்திக்கவுள்ளதாக சசிகலாவின் லீகல் டீம் கூறுகிறது.