காவலரை தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கண்டக்டரிடம் ரூ.80 ஆயிரம் பறித்து சென்ற வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா (55), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (19) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, காவலரை கீழே தள்ளிவிட்டு, கிருஷ்ணா தப்பினார். அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: