திருவானைக்காவல் கோயிலில் 3 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு

மண்ணச்சநல்லூர்: திருவானைக்காவல் கோயிலில் 3 அடி உயரமுள்ள சிவலிங்கம் நேற்று கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள சிவ வழிபாட்டு தலங்களில் சிறப்பு மிக்கதாகவும் நீர்தலமாகவும் போற்றப்படுவது. திருவானைககாவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோயிலில் உள்ள 3ம் பிரகாரத்தில் குபேரலிங்கம் சன்னதி அருகே உள்ள காம்பவுண்டு சுவரை இடித்துவிட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் 3 அடி உயரமுள்ள சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்திற்கு அருகே 2 அடி உயரமுள்ள மற்றொரு சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல் பரவ தொடங்கியதும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் அந்த சிவலிங்கத்தை ஆர்வமுடன் பார்த்து வணங்கினர்.

Related Stories: