மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, புளி போன்ற மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இதற்கு தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சத்தமில்லாமல் மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஓட்டலில் தொழிலில் ஈடுபடும் எங்களை போன்றவர்கள் தொழிலை நடத்தவே கடினமாக உள்ளது. அப்படி கஷ்டப்பட்டு கடன் வாங்கி வியாபாரம் செய்தால் கூட எங்கே வியாபாரம் ஆகுது. எதை எடுத்தாலும் பணம் கொடுத்து தொழில் நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. அதற்காக நாங்கள் கொடுக்கும் பொருட்களின் விலையை ஏற்றினால் வியாபாரம் படுத்துவிடும்.