புதுடெல்லி: பொருளாதார இழப்புகளை சமாளிக்க சரக்கு, பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்தும்படி ரயில்வே அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: போக்குவரத்து சேவை என்பது மிகுந்த போட்டியுள்ள துறையாக மாறி வருகிறது. அதனை கவனத்தில் கொண்டு ரயில்வே கட்டணங்களையும் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாதாந்திர பயணச் சீட்டுகள், குறைந்த கட்டணங்கள், இலவச சேவை போன்ற பல்வேறு சலுகைகளை ரயில்வே துறை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.