வாஷிங்டன்: ஏமன் நாட்டில் அரசுக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹூதி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் அரசு படைக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இந்த போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த போரில் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், நேற்று முன்தினம் பேட்டியில், “ஏமன் போரில் அந்நாட்டு அரசுக்கும், சவுதி அரேபியாவுக்கும் அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா திரும்ப பெறுகிறது. ஆயுத விற்பனையும் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்,” என்றார்.