உளவுத்துறை காவலர் போதையில் ரகளை

அண்ணாநகர்:  அமைந்தகரை காவல் நிலைய பெண் காவலர் பாரதி (28), நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை எம்எம்டிஏ காலனியில் ரோந்து சென்றபோது, போதையில் வந்த நபர், ‘அமைந்தகரை பகுதியில் கூட்டம் அதிகமாக உள்ளது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்’ என்றுள்ளார். நீங்கள் யார் என கேட்டதற்கு, ‘நான் உளவுத்துறை காவலர். என்னையே கேள்வி கேட்கிறாயா, உன்னை வேறு இடத்துக்கு மாற்றி விடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார். அவரை அமைந்தகரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, அந்த நபர் உளவுத்துறை காவலர் என்பது தெரியவந்தது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர்.

Related Stories: