குடகு: இந்திய ராணுவ ஜெனரல் கர்னல் திம்மையாவின் நினைவு இல்ல திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருகையையொட்டி 34 லட்சம் செலவில் சாலைகளை சீரமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குடகு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ராணுவ தளபதி கர்னல் திம்மையா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இந்த நினைவு இல்லத்தை வரும் 6ம் ேததி சனிக்கிழமை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.