சென்னை: இன்று 52-வது பேரறஞ்ர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம் என உறுதியேற்கிறோம் இன்று என கூறினார்.