தஞ்சை: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தஞ்சையில் இன்றுகாலை அளித்த பேட்டி: டெல்லியில் கடந்த 2 மாதமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. விவசாயிகளின் ஒரு கோரிக்கையை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிடுகின்றனர். சுமூகமான தீர்வு காண முயற்சிக்கவில்லை. இது சர்வாதிகார நாடா, ஜனநாயக நாடா என்று தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்.