புதுடெல்லி: செங்கோட்டை வன்முறை வழக்கில் என் குடும்பத்தினரை போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என்று தலைமறைவாக உள்ள பஞ்சாப் நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். ேவளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குபதிந்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட், லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் முறையாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.