அதிமுக கூட்டணியிலதாங்க இன்னும் இருக்கோம்... சரத்குமார் திடீர் பல்டி

சேலம்: ஒண்ணு, ரெண்டு சீட்லாம் தந்தா ஏற்க மாட்டோம், மூணாவது அணிக்கு போவோம் என்றெல்லாம் கூறிய சமக தலைவர் சரத்குமார் நேற்று சேலத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் இன்னும் அதிமுக கூட்டணியிலதான் இருக்கோம், கூட்டணி முடிவு செய்யப்பட்டதும் எங்களுக்கு எத்தனை இடம்னு கேட்போம் என கூறியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு: சேலத்தில் சமக தலைவர் சரத்குமார் கூறியதாவது: பொதுமக்கள் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், எப்படி இருக்கிறார்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கருத்து கேட்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே தமிழக முதல்வர், கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அதனால் எங்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. சசிகலா உடல்நலமடைந்து வெளியே வந்து இருக்கிறார். அவர் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்துவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. கூட்டணி முடிவு செய்யப்பட்ட பின்பு, எங்கள் கட்சிக்கு எத்தனை இடங்கள் வேண்டும் என்று கேட்கப்படும். அப்போது எத்தனை இடத்தில் போட்டி என்பதை முறையாக அறிவிப்போம். இவ்வாறு சரத்குமார் கூறினார். ஒண்ணு, ரெண்டு சீட்லாம் தந்தா ஏற்க மாட்டோம், மூணாவது அணிக்கு போவோம் என்றெல்லாம் நேற்றுமுன்தினம்தான் சரத்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: