சேலம்: ஒண்ணு, ரெண்டு சீட்லாம் தந்தா ஏற்க மாட்டோம், மூணாவது அணிக்கு போவோம் என்றெல்லாம் கூறிய சமக தலைவர் சரத்குமார் நேற்று சேலத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் இன்னும் அதிமுக கூட்டணியிலதான் இருக்கோம், கூட்டணி முடிவு செய்யப்பட்டதும் எங்களுக்கு எத்தனை இடம்னு கேட்போம் என கூறியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு: சேலத்தில் சமக தலைவர் சரத்குமார் கூறியதாவது: பொதுமக்கள் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், எப்படி இருக்கிறார்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கருத்து கேட்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே தமிழக முதல்வர், கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.