புதுடெல்லி: புதுவை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் அவருக்கு, காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை எம்எல்ஏக்கள் ஆதரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்தி அமைச்சர் பதவியை வழங்கியது. 15க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் கடந்த ஆண்டு அதிரடியாக நமச்சிவாயத்தின் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் முதல்வர் நாராயணசாமிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடும், மோதலும் தொடந்து இருந்து வந்தது.