வீடியோ வைரலானதால் சிக்கினார்: பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர், போயம்பாளையத்தை அடுத்த சக்திநகரில் பிறந்தநாள் விழாவின்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவு நேரங்களில் குடிபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டி பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்பகுதி பொதுமக்கள் புகாரின்படி அனுப்பர்பாளையம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  அப்போது சக்தி நகரை சேர்ந்த சதீஷ் (25) தனது பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஜான்சன் கைதானார். அவரது நண்பர்கள் 3 பேரை தேடுகின்றனர்.

Related Stories: