சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுகவின் 14வது பொதுத் தேர்தலில் சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் (ஒருவர்) பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து இன்று முதல் (28ம் தேதி) ரூ.25 ஆயிரம் தலைமை கழகத்தில் அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். வேட்புமனுவினை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் சென்னை கிழக்கு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்ட, பகுதி செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு திமுக தலைமை அறிவித்துள்ளது.

Related Stories: