தங்கவயல்:தங்கவயலில் விளையாட்டு ஆர்வம் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி பெற உதவும் வகையில் புதிய விளையாட்டு அரங்கம் குடியரசு தின நாளில் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எம்எல்ஏ ரூபகலா சசிதர் கூறினார். தங்கவயல் நகரசபை சார்பில் விளையாட்டு அரங்கமாக புனரமைக்கப்பட்ட நகரசபை மைதானத்தில் 72வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 9 மணியளவில் தங்கவயல் மாவட்ட போலீஸ் எஸ் பி.இலக்கியா கருணாகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதர், மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது.மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு குடியரசு எனப்படுகிறது. ஏற்ற தாழ்வற்ற சமூகத்திற்காக பாடுபட்ட டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட நாள் தான் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.